Posts

Showing posts from July, 2022

வங்கிக்கணக்கிணக்க கூற்று

காசேட்டிலுள்ள வங்கி மீதியும் வங்கிக் கூற்றின் வங்கி மீதியும் வேறுபடுமிடத்து அதற்கான வேறுபாடுகளைக் கண்டறிந்து அவற்றை சமப்படுத்துவதற்காக தயாரிக்கப்படும் கூற்றே இதுவாகும்.

வங்கிக் கூற்று

 திணைக்களத்தின் பெயரில் வங்கியில் பேணப்படும் கணக்கில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடைபெற்ற நிதிக் கொடுக்கல், வாங்கல்களை எழுத்துருவில் வெளிப்படுத்தி வங்கி முகாமையாளரால் அத்தாட்சிப்படுத்தி வழங்கப்படும் பத்திரம். குறித்த காசோலை நிச்சயமாக வங்கிக் கணக்கிற்கு செலவு வைக்கப்பட்டுள்ளதனை இக்கூற்றின் மூலமாக உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

வங்கி மேலதிகப்பற்று

தனியாரினால் பேணப்படும் நடைமுறைக் கணக்கில் அவர்கள் பணமாக எதிர்பார்க்கும் தொகை கணக்கில் இல்லாத போது வாடிக்கையாளரின் அதீத நம்பிக்கையையும், வங்கி முகாமையாளரின் தற்த்துணிவின் பேரிலும் வங்கியினால் மேலதிகமாக விடுவிக்கப்படும் தொகையே வங்கிமேலதிகப்பற்று ஆகும். அரச திணைக்களம் ஒன்றினால் இவ் வங்கி மேலதிகப் பற்று வசதியைப் பெற்றுக்கொள்ள முடியாது.

காலம் கடந்த காசோலை

செல்லுபடிக் காலமான 30 நாட்களிற்குள் காசோலை ஒன்று மாற்றப்படாதிருப்பின் அதுவே காலம் கடந்த காசோலை எனப்படும்.  இக் காசோலை தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளாவன :- • காலம் கடந்த காசோலைகள் பதிவேட்டில் பதிதல் வேண்டும். • செல்லுபடி காலத்தை நீடித்து கொள்ளுமாறு உரியவரிற்கு அறிவித்தல் வேண்டும். • உரியவரிடமிருந்து இரு கிழமைகளிற்குள் பதில் கிடைக்காத போது காசோலை இரத்துச் செய்யப்பட்டு உரிய கணக்கில் சேர்க்கப்படும் என அறிவித்தல். • ஆறு மாதங்கள் வரை பதில் கிடைக்காத போது இரத்துச் செய்ய நடவடிக்கை எடுத்து அரசிறைக் கணக்கில் சேர்த்தல். • இதற்கு திணைக்கள தலைவரின் பெயரில் பற்றுச் சீட்டு வழங்கப்படல் வேண்டும்.

பதில் காசோலை வரையும் போது பின்பற்ற வேணடிய நடைமுறைகள்

 • காசேடு, வங்கிக்கூற்றை சரிபார்த்து கொடுப்பனவு செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்தல் வேண்டும். • வங்கியில் பணம் செலுத்தப்படவில்லை என உறுதிப்பத்திரம் ஒன்றை வங்கியிலிருந்து பெறுதல். • பழைய காசோலையின் அடியிதழ் ரத்துச் செய்யப்பட்டு அதில் புதிய காசோலை இலக்கம், வரைந்த திகதி என்பவற்றை சிவப்பு மையினால் குறிப்பிடுதல். • அதேபோன்று புதிய காசோலையின் அடியிதழிலும் பழைய காசோலை இலக்கம், வரைந்த திகதி என்பவற்றை சிவப்பு மையினால் குறிப்பிடுதல். • முன்னய மாத வங்கிக்கணக்கிணக்க கூற்றிலுள்ள குறிப்பிட்ட காசோலை இலக்கத்திற்கு எதிரே புதிய காசோலை இலக்கம், திகதி என்பவற்றை சிவப்பு மையினால் எழுத வேண்டும். • புதிய காசோலையை எழுதும் திகதியில் காசேட்டு கொடுப்பனவு பக்க விபர பகுதியில் சிவப்பு மையினால் ரத்துச் செய்யப்பட்ட காசோலை இலக்கம், தொகை, உரிய விளக்கத்தையும் குறிப்பிடுதல் வேண்டும்.

மறுக்கப்பட்ட காசோலை

 வழங்கப்படும் காசோலையை வங்கியானது ஏற்க மறுக்கும் சந்தர்ப்பத்தில் அவை மறுக்கப்பட்ட காசோலை ஆகும். மறுக்கப்பட்ட காசோலையொன்று தொடர்பில் கீழ்வரும் நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.  அவையாவன :- • மறுக்கப்பட்ட காசோலைக்கு உரிய பாதுகாப்பளித்தல். • குறித்த காசோலைக்குரியவரிடம் விளக்கத்தையும், அதற்க்குரிய பணத்தையும் பெற்றுக் கொள்ளுதல். • காசோலைக்குரிய தொகையை உடனடியாக காசேட்டில் உறுதிச்சீட்டின் மூலம் செலவு வைத்தல். காசோலை மறுக்கப்படும் சந்தர்ப்பங்கள் :- • காசோலைக்குரிய கால எல்லை முடிவடைந்திருந்தால். • காசோலையில் கையொப்பங்கள் வேறுபட்டிருந்தால். • காசோலையானது சிதைவடைந்திருந்தால். • காசோலையில் குறிப்பிடப்பட்ட தொகை எண்ணிலும்ää எழுத்திலும் வேறுபட்டிருந்தால். • திணைக்களத்தினால் வங்கிக்கு நிறுத்தல் கட்டளை பிறப்பிக்கப்பட்டு இருந்தால்.

நட்ட ஈட்டு உடன்படிக்கை பத்திரம்/ இழப்பீட்டு உத்தரவாதம்

தொலைக்கப்பட்ட காசோலைக்குரிய நட்டங்கள், செலவுகள் போன்றவற்றிற்கும் பதில் காசோலையை வழங்குவதால் ஏற்படும் விளைவுகளிற்கும் திணைக்களம் பொறுப்பல்ல. தானே முழுப்பொறுப்பு என பதில் காசோலை பெறுபவரினால் கையொப்பமிட்டு வழங்கப்படும் பத்திரமே இதுவாகும்.

காசோலை ஒன்று காணாமற் போனால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

 • காணாமற் போன காசோலைக்கு பணம் செலுத்த வேண்டாம் என்ற கொடுப்பனவு நிறுத்தற் கட்டளையை வங்கிக்கு அறிவித்தல் வேண்டும். • காணாமற் போன காசோலை குறிப்பிட்ட நபரின் பெயரிற்குதான் வழங்கப்பட்டது , இதுவரை வங்கியில் கொடுத்து மாற்றப்படவில்லை என்பதை காசேடு, வங்கிகூற்று ஆகியவற்றை செவ்வை பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். • கொடுப்பனவு நிறுத்தல் கட்டளையின் பெயரில் உரிய காசோலை எக்காரணம் கொண்டும் மாற்றிக்கொடுபட மாட்டாது என்ற உறுதிச் சான்றிதழை வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளுதல் • காசோலையை தொலைத்தவரிடமிருந்து நட்ட ஈட்டு உடன்படிக்கை பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

காசோலைகளை தபால் மூலம் அனுப்புதல்

 • குறுக்கு கோடிட்ட காசோலைகளை மாத்திரம் தபாலில் அனுப்பலாம். • அக்காசோலைகளை பதிவு தபாலில் அனுப்புதல் வேண்டும். • பதிவேட்டில் காசோலை எழுதிய திகதி, காசோலை இலக்கம், காசோலை எழுதிய வங்கியின் பெயர், யாருடைய பெயரிற்கு அனுப்பப்பட்டது, காசோலைகளின் எண்ணிக்கை, உறுதிச்சீட்டு இலக்கம், அனுப்பிய திகதி, அனுப்பிய உத்தியோகத்தரின் முதலொப்பம் என்பன குறிப்பிடப்படுதல் வேண்டும். • காசோலையை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புக் கோடலை பெற்று கொவைப்படுத்தல் வேண்டும்.

காசோலைகள்

 • திணைக்களம் ஒன்றிற்கு காசோலைகள் கிடைக்கப் பெற்றதும் அதனை காசோலை, காசுக்கட்டளைகள் பதிவேட்டில் கட்டாயமாக பதிவு செய்தல் வேண்டும். • அவ்வாறு பிற திணைக்களங்களிலிருந்து காசோலைகள் பெற்றுக் கொண்டமைக்காக உரிய திணைக்களத்தால் பொது படிவம் -72 (மஞ்சள் பற்றுச் சீட்டு ) வழங்கப்படும். • காசோலை ஒன்றிற்கு குறுக்காகவும், நெடுக்காகவும் இரு சமாந்தரக் கோடுகளை இடுவதன் மூலம் குறுக்குக் கோட்டினை இடலாம்.

காசோலையை எழுதும் போது பின்பற்ற வேண்டியவை

• அழிக்க முடியாத மையினால் எழுத வேண்டும். • காசோலையின் சொற்களும், இலக்கங்களும் எழுதப்படும் போது இடைவெளி விடக்கூடாது. • பதவிப் பெயரிற்கு காசோலை எழுதும் போது பதவிப்பெயரானது முழுமையாக எழுதப்படல் வேண்டும். • பெறுவோனுக்கு வங்கியில் கணக்கு இருக்குமாயின் பெறுவோன் கணக்கு மட்டும் என குறுக்கோடிடப்பட்டு வழங்குதல். • கொடுப்பனவு உறுதிச்சீட்டு இலக்கத்தை காசோலையின் அடியிதழில் குறிப்பிடுதல் வேண்டும். • காசோலையின் செல்லுபடிக்காலம் 30 நாட்களை கொண்டுள்ளதா என சரிபார்த்தல். • அங்கீகரிக்கபட்ட இரு உத்தியோகத்தர்களும் காசோலையில் கையொப்பமிடுதல். • காலநீடிப்பின் போது அங்கீகரிக்கபட்ட இரு உத்தியோகத்தர்களும் காசோலையில் கையொப்பமிடுதல் வேண்டும்.

வங்கிக் கணக்கை திறத்தல்

 • வங்கிக் கணக்கை திறப்பதற்கான விண்ணப்பம் அதற்கான அவசியத்தன்மை என்பவற்றை விளக்கி திறைசேரி கணக்ககள் திணைக்களத்திற்கு பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் ஊடாக சமர்ப்பித்தல் வேண்டும். • அதில் வங்கிக் கணக்கு திறக்கப்படவுள்ள வங்கியின் பெயர்ää கணக்கு தலைப்பு, கணக்கை இயக்குவதற்கு அனுமதிக்கப்பட்ட உத்தியோகத்தர்களது பதவி மற்றும் பெயர்ää காசோலையில் கையொப்பமிட அனுமதிக்கப்பட்ட உத்தியோகத்தர்களின் ஆண்டுச் சம்பளம் மற்றும் திணைக்கள தலைவரது கையொப்பம் என்பவற்றை குறிப்பிடுதல் வேண்டும். • காசோலையில் கையொப்பமிட அதிகாரமளிக்கப்பட்ட இருவரின் நான்கு மாதிரி அடடைகளில் கையொப்பத்தை உறுதிப்படுத்தி திணைக்கள தலைவர் ஊடாக அனுப்புதல். • காசோலையில் கையொப்பமிட அனுமதிக்கப்பட்ட பிணை செலுத்தியவர்களது விபரத்தையும் இணைத்தல் வேண்டும். • பிரதான கணக்கீட்டு உத்தியோகத்தர் திணைக்கள தலைவரது கையொப்பத்தை உறுதிப்படுத்தி சிபாரிசு செய்து திறைசேரி செயலாளரிற்கு அனுப்புதல். • திறைசேரி செயலாளர் வங்கிக் கணக்கின் அவசியத் தன்மையை கருத்திற் கொண்டு அனுமதி வழங்குவார். • அனுமதிக் கடிதமானது வங்கிக்கு விலாசமிட்டு திணைக்கள தலைவரிற்கு பிரதி...