பதில் காசோலை வரையும் போது பின்பற்ற வேணடிய நடைமுறைகள்

 • காசேடு, வங்கிக்கூற்றை சரிபார்த்து கொடுப்பனவு செய்யப்படவில்லை என்பதை உறுதி செய்தல் வேண்டும்.

வங்கியில் பணம் செலுத்தப்படவில்லை என உறுதிப்பத்திரம் ஒன்றை வங்கியிலிருந்து பெறுதல்.

பழைய காசோலையின் அடியிதழ் ரத்துச் செய்யப்பட்டு அதில் புதிய காசோலை இலக்கம், வரைந்த திகதி என்பவற்றை சிவப்பு மையினால் குறிப்பிடுதல்.

அதேபோன்று புதிய காசோலையின் அடியிதழிலும் பழைய காசோலை இலக்கம், வரைந்த திகதி என்பவற்றை சிவப்பு மையினால் குறிப்பிடுதல்.

முன்னய மாத வங்கிக்கணக்கிணக்க கூற்றிலுள்ள குறிப்பிட்ட காசோலை இலக்கத்திற்கு எதிரே புதிய காசோலை இலக்கம், திகதி என்பவற்றை சிவப்பு மையினால் எழுத வேண்டும்.

புதிய காசோலையை எழுதும் திகதியில் காசேட்டு கொடுப்பனவு பக்க விபர பகுதியில் சிவப்பு மையினால் ரத்துச் செய்யப்பட்ட காசோலை இலக்கம், தொகை, உரிய விளக்கத்தையும் குறிப்பிடுதல் வேண்டும்.

Comments

Popular posts from this blog

வங்கிக் கூற்று

வங்கிக்கணக்கிணக்க கூற்று